வெள்ளி, மார்ச் 16, 2012

பாமக பிரமுகர் மகளுடன் ஓடிய வாலிபர் கொலை....


 சென்னை மந்தவெளியில் உள்ள சிருங்கேரி மடச்சாலையில் பக்கிங்காம் ஓடை அருகே 25 வயது வாலிபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார்.
விசாரணையில் அவரது பெயர் பிலால் என்பதும், மந்தவெளி பிள்ளையார் கோயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை எங்கேயோ வைத்துக் கொன்று, வாகனத்தில்ஏற்றி, காணப்பட்ட இடத்தில் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது. ஓடையருகே இருந்த பாழடைந்த கிணறு ஒன்றின் அருகே பிணம் காணப்பட்டது. தலையிலும் கழுத்திலும் காயங்கள் காணப்பட்டனவாம்.
மயிலாப்பூர் நகராட்சி உறுப்பினரும், பாமக பிரமுகருமான மணிவண்ணன் என்பவரின் மகளுடன் இந்த பிலால் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் ஓடிப்போன விவகாரத்தில் இரு குடும்பத்தினருக்கும் முன்பகை இருந்ததாகத் தெரியவருகிறது.www.asiananbanblogspot.com

பிலால் தன்மகளைக் கடத்திச் சென்றதாக மணிவண்ணன் காவல்துறையில் அப்போது முறையிட்டிருந்தார். அதையொட்டி, பிலாலின் சகோதரர் அஹமது பாஷா என்பவரை காவல்துறை அழைத்து மணிவண்ணன் முன்னிலையில் விசாரணையைத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் கையிலிருந்த துப்பாக்கிக் கத்தியைப் பிடுங்கி அஹமது பாஷாவை மணிவண்ணன் தாக்கியதாகத் தெரிகிறது. காயமடைந்த அஹமது பாஷா மருத்துவமனைக்கும், காயப்படுத்திய மணிவண்ணன் சிறைக்கும் அப்போது அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிலால் பிணமாக இப்பகுதியில் கிடந்தது காவல்துறைக்கு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கோ கொல்லப்பட்ட பிலாலை அந்தி நேரத்தில் வாகனத்தில் வைத்து அப்பகுதியில்  இறக்கிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை புலன்விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக